மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதம், நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

பூம்புகார் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்.

Update: 2021-06-12 12:58 GMT

பூம்புகார் அருகே காட்டுச்சேரியில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் விடு இழந்தவருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச் சேரி கிராமத்தில் மின்கசிவு காரணமாக கோகிலா என்பவரது கூறைவீடு எரிந்து நாசமானது.

இதில் கோகிலா உடைமைகள், அவரது 2 மகள்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர் . இச்சம்பவம் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் .முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

Similar News