திருவெண்காடு ரேஷன் கடை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவெண்காடு ரேஷன் கடை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் லலிதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-01-29 11:45 GMT

ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் லலிதா.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவென்காடு கிராமத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியில் தரத்தை கேட்டறிந்ததுடன் பழுப்பு அரிசியை மக்களுக்கு வழங்கக்கூடாது. தரமான சன்ன ரக அரிசி மட்டுமே இனி வழங்க வேண்டும், தரமற்ற அரிசி இருப்பு இருந்தால் அதனை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் திருவென்காட்டில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொள்முதல் நிலையத்தில் உள்ள ஊழியர்களிடம் நெல்வரத்து குறித்து கேட்டறிந்ததுடன் ஆன்லைன் பதிவு செய்த விவசாயிகளின் நிலை , காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் இந்தக் கொள்முதல் நிலையத்திற்கு காங்கிரீட் தரைத்தளம் மற்றும் மேற்கூரை அமைத்துதர அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்

Tags:    

Similar News