நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2021-12-26 13:33 GMT

நடிகர் வடிவேலு குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைச்சுவை நடிகர் வடிவேல் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பூரண குணமடைய வேண்டி அவருடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சார்பாக சீர்காழி ஆலயத்தில், உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை கொண்ட மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற குழந்தைகள் நகைச்சுவை நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து உணவருந்தினர்.  இந்நிகழ்வில் அவரது ரசிகர்களும் நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News