மதுரை மாநகர குற்றச் செய்திகள்

மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள்..

Update: 2021-06-17 07:40 GMT

மதுரை சிட்டி போலீஸ் லோகோ 

க்ரைம் 1

மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த போது, அந்த வழியாக சத்தியமங்கலத்தை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஜாமைதீன் பலியானார் .

இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

க்ரைம் 2

மதுரை அரசு மருத்துவமனை முன்பு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது :

பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

மதுரை அருகே திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சத்யா 28. இவர் அரசு மருத்துவமனை மெயின் கேட் அருகே சென்றபோது, கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார். அப்போது, சத்யா கூச்சல் போடவே, பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். அந்த வாலிபரை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அவர் சிவகங்கை மாவட்டம் பழையனேந்தலை சேர்ந்த பெரிய பாண்டி மகன் நாகராஜன் 26 என்று தெரிய வந்தது . அவரை போலீசார் கைது செய்தனர்.

க்ரைம் 3

மதுரை செல்லூரில் லோடுமேன் பூச்சி மருந்தை தின்று தற்கொலை

போலீஸ் விசாரணை:

செல்லூர் அருள்தாஸ்புரம் தேங்காய் கடை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தற்போது, லாக்டவுன் காரணமாக இவருக்கு வேலை இல்லை.

இதனால் , வருமானம் இன்றி சிரமப்பட்டார். இதன் காரணமாக, மனமுடைந்து பூச்சிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News