மதுரையில் மருத்துவமனை அருகே நின்றிருந்த பெண்ணை மிரட்டி நகை பறிப்பு

Update: 2021-11-07 13:30 GMT

கருப்பாயூரணியில் வீட்டை உடைத்து தங்கம் ,வெள்ளி நகைகள், டிவி  திருட்டு

மதுரை அருகே கருப்பாயூரணியில் வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் டிவி போன்ற பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .

கருப்பாயூரணி மல்லிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக்( 30.) இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைத்திருந்த 5 பவுன் தங்க செயின், வெள்ளி கால்கிலோ, தங்க காசு ஒரு கிராம் ,டிவி ஒன்று, பித்தளை பொருட்கள் 3 கிலோ முதலிய வற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக, கார்த்திக் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் பெண்ணிடம் நகை பறிப்பு:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பொட்டபாளையத்தை சேர்ந்தவர் முத்துமாரி( 33 .) இவர் சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனை முன்பாக நின்று கொண்டிருந்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் முத்துமாரியை மிரட்டி அவரிடம் இருந்து ஒரு பவுன் நகையை பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து முத்துமாரி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News