மதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது
இருவருக்கும் குழந்தைகள் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்தது;
மதுரையில், மனைவியை கொலை செய்த கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5-வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆனது. கணவர் சிவகுமார் ஓய்வுபெற்ற ரயில்வே சிக்னல் ஆபரேட்டராக இருந்தார். திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையிலும் இருவருக்கும் குழந்தைகள் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்தநிலையில், இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் ,மேரி குட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து, மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.