மதுரையில் ஊர்வலமாக வந்து அரசுக்கு நன்றி தெரிவித்த பழங்குடியினர்

தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த, தமிழக அரசுக்கு தமிழக நாடோடிகள், பழங்குடி கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2021-11-22 11:15 GMT

பழங்குடியினர்,  நாடோடிகளை தேடிச் சென்று அரசு உயர் அதிகாரிகள்,  அவர்களது குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதிகாரிகள் பழங்குடியின பிரச்சனைகள், குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய்பீம் படம் மூலம் தங்களது இன்னல்களை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக தங்களது குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நன்றியும் வாழ்த்துக்களையும் பழங்குடியினர் இன்று தெரிவித்தனர். அத்துடன், பதாதைகளை ஏந்திவாறு,  தமிழக நாடோடிகள் பழங்குடி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News