மதுரை அருகே கடனுக்கு சிகரெட் கேட்டு, கொடுக்காத கடைகாரர் அடித்துக் கொலை
மதுரை மதுரை சக்கிமங்கலம் அருகே கடனுக்கு சிகரெட் கேட்டு, கொடுக்காததால் அவரை மூன்று பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்;
மதுரை சக்கிமங்கலம், சமத்துவபுரத்தில் சேர்ந்த வினோத் 32. இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த சக்கிமங்கலம் கல்மேடு பகுதியை சேர்ந்த அருண் பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய 3 பேர் சிகரெட் கடன் கேட்டுள்ளனர். அப்போது, பெட்டி கடையில் இருந்த வினோத்தின் தாயார் சந்தன மேரி தர மறுக்கவே, குற்றவாளி மூவர் ஆபாச வார்த்தைகள் பேசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அந்த மூன்று பேரிடம் வினோத் கேட்டபோது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த வினோத்தை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தநிலையில், உடல் நிலை மோசமான நிலையில் வினோத்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர் கூறினார். எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வினோத்தை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து, சிலைமான் காவல் நிலையத்தில் வினோத்தின் சகோதரி செல்வி கொடுத்த புகாரின் பேரில், மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.