மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம்
குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 206 மனுக்களில் 175 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்;
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடம் மனு பெற்ற ஆணையாளர் கார்த்திகேயன்.
மதுரை மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ,வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி, குடிநீர், புதை சாக்கடை சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 103 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையாளர் நேரடியாக பெற்றார்.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார். சென்ற குறைதீர்க்கும் முகாமில், பெறப்பட்ட 206 மனுக்களில் 175 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இம்முகாமில், உதவி ஆணையாளர் .அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.