மதுரையில் வேளாண் துறையின் சார்பில் பயிற்சியை துவக்கி வைத்த அமைச்சர்

Minister inaugurates Agriculture training in Madurai

Update: 2022-06-25 07:45 GMT

மதுரையில் பயிற்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ப. மூர்த்தி

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் தொடர்பான மண்டல அளவிலான பயிற்சியை  மதுரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர்  தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக பிரமுகர் அக்ரி கணேசன் மற்றும் வேளாண் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News