கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Robbery News - பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-28 01:45 GMT
கொள்ளையடிக்கப்பட்ட கோவிலில் விசாரணை நடத்தும் போலீசார்.

Robbery News -மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசுமலை ஜி.எஸ்.டி. சாலையில் அருள்மிகு விபூதி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று காலையில் வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக , கோயில் நிர்வாகிகள்ன மற்றும் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோயில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, இரண்டு முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக திருட்டு நடைபெற்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News