திருச்சுழி திருமேனி நாதர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம்

திருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்சவ விழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது

Update: 2022-03-18 09:15 GMT

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நடந்த  தேரோட்டம்

திருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்சவ விழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அமைந்துள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 10 நாட்களாக சர்வ அலங்காரங் களுடன் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனைக்குப் பின் பொதுமக்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை இழுத்தனர் .தேர் முக்கிய வீதிவழியாக வந்து நிலையை அடைந்தது.

Tags:    

Similar News