மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் பிப். 5- ஆம் தேதி வசந்த பஞ்சமி விழா
வசந்த பஞ்சமியையொட்டி, பிப்.5-ம் தேதி சனிக்கிழமை காலை 8.45..மணிக்கு, இக்கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்;
மதுரை சௌபாக்யா விநாயகர்
மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி வசந்த பஞ்சமி விழா நடைபெறவுள்ளது.
மதுரை, மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், வசந்த பஞ்சமியையொட்டி, பிப்.5-ம் தேதி சனிக்கிழமை காலை 8.45..மணிக்கு, இக்கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெறும். மேலும், அனைத்து பெயர்களுக்கும் அர்ச்சனைகள் செய்யப்படவுள்ளது.பூஜையில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 8760919188-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள், மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.