கல்லூரி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்
கல்லூரி மாணவர் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு மறத் தழிழர் சேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
மறத்தமிழர் சேணை அமைப்பினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தக்கோரி, மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே மறத்தமிழர் சேணை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ராமநாதபுரம் ஒன்றியத் தலைவர் கலைவேந்தன் தலைமை வகித்தார். நகரத் தலைவ சேதுபதிசதிஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சௌந்தரபாண்டியன், சிவா, விநோத் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.