மேலூரில் பதுக்கிவைக்கப்பட்ட 33 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
மேலூரில் பதுக்கிவைக்கப்பட்ட 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த சேகர் என்பவரை கைது செய்த மேலூர் காவல்துறையினர் அவரிடமிருந்து 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.