மதுரையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை நிறுத்தும் போராட்டம்

மதுரையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-11 09:59 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.

மத்திய மோடி அரசின், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, மதுரையில் அப்போலோ மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், மதுரை கட்டுமான தொழிற்சங்கமும், நகர் மின்வாரிய சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெ.லூர்து ரூபி, ஏ.இராஜேந்திரன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News