மதுரை வடக்கு தொகுதியில் கமலஹாசன் பிறந்தநாள்: அன்னதானம் செய்த கட்சியினர்
மதுரை அண்ணாநகர் பகுதியில் யானை குழாய் பகுதியில், 1500 நபருக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது;
மதுரையில் நடைபெற்ற கமலஹாசன் பிறந்தநாள் விழா அன்னதானம்
மக்கள் நீதி மையத்தின் தலைவர், கமல்ஹாசன் 67-வது பிறந்தநாளை எம். அழகர் மதுரை மண்டல மாநில செயலாளர் ஆலோசனைப்படி, அண்ணா நகர் முத்துராமன் தலைமையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் யானை குழாய் பகுதியில், 1500 நபருக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.
இவ்விழாவில், எம். பி. செல்லப்பாண்டியன், நாகேந்திரன், குணா அலி, தேனூர் சாமிகளை ,எஸ்.பி. ஆசைத்தம்பி, கரிசல்குளம் முருகன், ஐராவதநல்லூர் பூமி, ராஜா தங்க குமார், மானகரி கமல் மருது, மதிச்சியம் ராமலிங்கம், எஸ் .எம். பி. காலனி செல்லத்துரை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.