மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவில் முறைகேடு: தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு
தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மதுரை மண்டல வணிக குற்றப்புலனாய்வுத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது;
தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர் சுற்றுலாவில் வரி முறைகேடு தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டது
மதுரை, மேலூர் அருகே கடந்த ஒரு வாரமாக தனியார் நிறுவனம் மூலமாக ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சுற்றி பார்ப்பதற்காக கட்டணம் வசூலித்து பொதுமக்களை அழைத்து சுற்றுலாப் பயணம் நடத்தியது. ஆனால், அரசுக்கு முறையாக வரி செலுத்தாது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த தனியார் நிறுவனத்திற்கு 4.25லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மண்டல வணிக குற்றப்புலனாய்வுத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.