தனியார்- உதவி பெறும் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு அரசு விதி பொருந்தும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அரசு விதிகள் தனியார்-அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அமலாக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

Update: 2021-09-21 16:16 GMT

 உயர்நீதிமன்ற மதுரை கிளை (பைல்படம்) 

தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் பொருந்தும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க  சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு.

 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  தொடுத்த பொதுநல வழக்கு தொடர்பான மனு விவரம்: 

"தமிழக அரசு, அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதனடிப்படையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலை உள்ளது. 

இதனால், மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க இயலாத நிலை உருவாகும். ஆகவே, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் பொருந்தும் என உத்தரவிட்டு, அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு, இந்த  மனுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News