மதுரை அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது

மதுரை அருகே நடந்த கொலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-03 13:20 GMT

பைல் படம்

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவான எதிரிகளை கண்டு பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், உத்தரவின்பேரில் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பின்னர், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான 1.கார்த்திக் கண்ணன் என்ற கருவாடு வயது 22. சக்கிமங்கலம், 2.அருண்குமார் வயது 21 . சிலைமான், 3.ரமேஷ் வயது 23. சக்கிமங்கலம், 4.மணிகண்டன் வயது 25. கல்மேடு, 5.தர்ஷன் என்ற சமய முத்து வயது 21 . கல்மேடு ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.

Tags:    

Similar News