தென் மாவட்டங்களில் தேவர் ஜயந்தியன்று அரசு விதிமுறைகளை மீறியதாக 33 பேர் கைது

Update: 2021-11-06 04:00 GMT

பைல் படம்

தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக இதுவரை 33 பேர் கைது:

தென்மாவட்டத்தில், தேவர் ஜயந்தியையொட்டி, அரசு விதிமுறைகளை மீறியதாக, இதுவரை 1544 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும், 33 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தென் மண்டல காவல் துறைத் தலைவர் கா. அன்பு ஆலோசனையின் பேரில், அரசு விதிமுறைகளை மீறியதாக, 1544 பேர் மீது 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணொளிகளை பார்த்து, மேலும் வழக்குகள் பதியப்படும் என, காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News