மதுரை : சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை அருகே கடச்சனேந்தலில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-19 05:45 GMT

மதுரை அருகே கடச்சனேந்தலில் நடந்த, சமுதாய வளைகாப்பு: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், மதுரை அருகே கடச்சனேந்தலில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை  வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News