தமிழர்கள் மீது பா.ஜ.கவுக்கு அக்கறை இல்லை : கமல்ஹாசன்

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

Update: 2021-03-24 17:00 GMT

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது :

தேர்தல் நேரத்தில் ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறை பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பதை காட்டுகிறது பாஜக அரசின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு நன்மை பயக்காது தங்களது தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கணினி வழங்குவது அரசு சொத்து.

தமிழகத்தை காகித பரிமாற்றம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் முயற்சியாக கணினி வழங்கப்படும் கணினி வழி செயல்பாடு மூலம் இடைத்தரகர்கள் அகற்றப்படுவர் கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News