Royakottai st.antony's church festival-ராயக்கோட்டை அருகே நாகமங்கலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா..!

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்றது.

Update: 2023-07-10 10:42 GMT

Krishnagiri news today, Royakkottai news, Nagamangalam st.Antony's Church festival

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே நாகமங்கலம், லூர்து நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 8ம் ஆண்டு திருவிழா நடந்தது. அந்த விழாவில் புனித அந்தோணியார் சிலை, புனித சூசையப்பர் சிலை, அன்னை ஆரோக்ய மேரி சிலை மற்றும் இயேசுவின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குழந்தை இயேசுவை கையில் ஏந்திய புனித அந்தோனியார் உருவம் பதிக்கப்பட்ட கொடி ஆலயம் முன்பு ஏற்றப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்து வளம் பெருகவும், இப்பகுதியில் தொழில் வளரவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.


தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர் பவனி நடைபெற்றது. இதில் நடனக் கலைஞர் டானி உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தின் சார்பில் ரேய்ச்சல்மேரி விஜயகுமார், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News