உடல்நலக்குறைவால் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

உத்தனப்பள்ளி அருகே உடல் நலக்குறைவால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-09-11 07:45 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கே.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி அவரை ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ., சரவணன் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News