ஓசூரில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை; கணவன் போலீசில் சரண்

ஓசூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.;

Update: 2021-08-22 14:15 GMT

காவல் நிலையத்தில் சரணடைந்த ஜோதிஷ்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.சாலையில் வசித்து வந்தவர் ஜோதிஷ். இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவருக்கும் கர்நாடக மாநிலம் ஜிகினியை சேர்ந்த வந்தனா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் லத்தீஷ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜோதிஷ் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.  நேற்று குழந்தை லத்தீஷ் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். அந்த நேரத்தில் கணவன்  மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிஷ் மனைவியின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்தார். மனைவியை கொன்ற அவர், வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனயைடுத்து ஜோதிஷ் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில், மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே பிணமாக கிடந்த வந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டி.எஸ்.பி.முனுசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ஜோதிசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News