ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 04:45 GMT

ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கோட்டாட்சியர், தேசியக்கொடி ஏற்றி 6பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை வழங்கினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றி, நாட்டுப்பாடல்,  பாடி அங்குள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஓசூரை சேர்ந்த 6 பயணாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை  தேன்மொழி வழங்கி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags:    

Similar News