ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் பெரும் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Update: 2021-12-27 04:20 GMT

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பெங்களுர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு : முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  பகுதிகளில் காலை 8 மணி வரை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பெங்களுர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

ஓசூர் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி சென்றது. பனிப்பொழிவு ஆனது அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு கடும் பனிப்பொழிவு, கடுமையான குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் ஊர்ந்து சென்றது. இந்த பணியின் தாக்கம் காலை 8 மணி வரை நீடித்திருந்தது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News