தீராத வயிற்று வலி: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

பேரிகை அருகே தீராத வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-03 09:15 GMT

பைல் நிறுவனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த சிந்தல்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு சிந்தல்தொட்டி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மகன் சீனிவாசா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News