ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா: 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

ஆருப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

Update: 2022-01-15 10:50 GMT

ஆருப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழா.

மாட்டு பொங்கலன்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தையம் போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரபலமானது எருதுவிடும் விழா.

எருதுவிடும் விழாவில் வேகமாக ஓடக்கூடிய காளைகள், மாடுகள் மட்டுமே பங்கேற்கும். மாடுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டப்பட்டு, இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்படும்.

இருபுறங்களில் மரங்களால் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு தோரணம் கட்டும் பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தான் இளைஞர்கள், மாட்டினை அடக்க வேண்டும். 

சீறிபாயும் காளைகளை ஒருவரோ அல்லது கூட்டாகவோ பிடிக்கலாம் அப்படி பிடிப்போருக்கு மாட்டு கொம்பில் இருக்கும் தடுக்கை மட்டுமே பரிசாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற பரிசுகள் காளை உரிமையாளர், மாடு பிடி வீரர்களுக்கோ வழங்கப்படாது.

மாட்டு கொம்பில் கட்டப்படும் தடுக்கைகளின் மதிப்பு 5000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை இருக்கும். மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாட்டினை பிடிப்போருக்கு ரொக்கப்பணத்தை பரிசாக அறிவிப்பதும் உண்டு. ஒரு மாட்டினை பலமுறையும் அவிழ்த்து விடலாம். நூற்றாண்டுகளுக்கு மேலாக எருதுவிடும் விழாக்கள் பாரம்பரியமாக நடைப்பெற்று வருகிறது.

ஜனவரி மாதம் தொடங்கி - ஏப்ரல் மாதம் வரை வெவ்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக நடத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் எருதுவிடும் விழா, ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் இன்று நடைப்பெற்றது.

மாவட்டத்தின் சூளகிரி,பேரிகை,பாகலூர்,உத்தனப்பள்ளி,மேலுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300க்கும் அதிகமான காளை மாடுகள் அழைத்துவரப்பட்டு பங்கேற்றிருந்தன. காளைகளை அடக்க இளைஞர் கூட்டத்திற்கு இடையே கடும் போட்டியும், சவாலாகவும் இருந்து மல்லுக்கட்டினர்.

மேலும் ஓசூர், சூளகிரி, பாகலூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

Tags:    

Similar News