ஓசூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஓசூர் மாநகராட்சியில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2022-01-17 11:21 GMT

ஓசூர் மாநகராட்சியில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாள் விழாவை அரசு மற்றும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானமும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் நகர செயலாளர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News