மது விருந்து வைத்து வாலிபர் படுகொலை: கள்ளத்தொடர்பு காரணமா? போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதுபாட்டிலால் குத்தி இளைஞர் படுகொலை, நள்ளிரவு நடந்த பயங்கரம்.

Update: 2021-11-22 06:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அஹ்ராகரம் பகுதியில் நள்ளிரவில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (32 )பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருடைய நண்பர் லட்சுமணன் என் பி அக்ராகரம் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருகிறார், சத்தீஷை மது அருந்த வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சத்தீஷை மது பாட்டிலால் குத்தி படு கொலை செய்துள்ளாதாக தெரிகிறது. இந்தக் கொலை தொடர்பாக நகர போலீசார் லட்சுமணன், மகேந்திரன் , பிரதாப், சிவகாமி ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளத்தொடர்பில் இக்கொலை நடந்திருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News