கரூரில் இன்று 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

கரூர் மாவட்டத்தில் இன்று, ஆறு இடங்களில் மொத்தம் 1,800 பேருக்கு கோவிஷூல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-07-04 02:34 GMT

கரூர் மாவட்டத்தில் ஜூலை 4-ஆம் தேதி இன்று,  6 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்  விவரம் வருமாறு:

கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பண்டுதகாரபுதூர், அரசு மேல்நிலைப்பள்ளி , காணியாளம்பட்டி, பகவதி துவக்கப்பள்ளி , கவுண்டம்பட்டி, தாந்தோணி அரசு இடைநிலைப்பள்ளி , கோடங்கிப்பட்டி, பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி, கோடாந்தூர்.

மேற்கண்ட 6 இடங்களில் இன்று காலை 9.30 மணி தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News