வேலாயுதம்பாளையத்தில் தவறி விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உயரமான இடத்தில் பெயிண்டர் பணிபுரிந்த போது தவறி விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார்.

Update: 2021-09-30 16:45 GMT

பைல் படம்.

வேலாயுதம்பாளையம் கடைவீதியை சேர்ந்தவர் மூர்த்தி ( 65 ) பெயிண்டர். இவர் காந்திநகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் குப்புசாமி (42) என்பவரின் மூலம் நல்லிக்கோவில் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (44) என்பவரது வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் உயரமான பகுதியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும்வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News