சட்ட உதவி கோரலாம் சட்டப்பணிகள் குழு அறிவிப்பு

ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் குழுவை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-12 17:00 GMT

இது குறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள   செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழக அரசு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பேரிடரால் பாதிப்புள்ளானவர்களுக்கு தகுந்த சட்டம் மற்றும் இதர உதவிகள் செய்ய வேண்டுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது .

எனவே ஊரடங்கு காலத்தில் வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் , நமது மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேறு வகையில் பாதிப்புள்ளானவர்கள் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை வேலை நேரங்களில் 04324-296570 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

மேலும் இதர நேரங்களில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணிபுரியும் இளநிலை நிர்வாக உதவியாளர் ஸ்டாலின் 9790179565 , தன்னார்வலர் சங்கீதா 8098237062 ஆகியோரை தொடர்பு கொண்டு ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி கோரலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News