வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-04-10 05:30 GMT

கரூரில் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் பணிக்காக கரூர் சேலம் புறவழி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அனைத்து கதவுகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கலெக்டரும், கரூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News