விபத்தில் காயமுற்றவர் உயிரிழப்பு

கரூர் வேலாயுதம்பாளையம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2021-07-16 15:15 GMT

மாதிரி படம் 

பண்டுதகாரன் புதூர் செல்வம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்(56). இவர் நேற்று காலை தளவாபாளையம் அருகே பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர்  சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று வெங்கடாசலம் இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.



Tags:    

Similar News