3 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டது.

Update: 2021-06-04 09:53 GMT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளையில் உள்ள ஆசிரியர்கள் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதனை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி வழங்கினார்.

நிதியில் 2.50 லட்சம் ரூபாயை அம்மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் கட்டும் திட்டத்தில் ஆக்சிஜன் இணைப்புக்கான பைப்லைன் அமைக்கும் பணிக்கும், 50,000 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கல்லுாரி முதல்வர் டாக்டர் மணி, கூட்டணி மாவட்ட பொருளாளர் தங்கராஜ், பெருந்துறை வட்டார செயலாளர் மலையப்பசாமி, மொடக்குறிச்சி வட்டார செயலாளர் வரதராஜன், ஈரோடு வட்டார செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News