குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

குன்னத்தூர் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2021-10-18 08:00 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மன அளித்த எம்எல்ஏ., ஜெயக்குமார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிக்கு ஏற்கனவே உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்னியை நேரில் சந்தித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்  ஜெயக்குமார் மனு அளித்தார்.

அந்த மனுவில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கடிதத்தில், பழைய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குன்னத்தூர் பகுதிக்கு வர வேண்டிய இரண்டு லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகத்தில் கடந்த ஆறு மாதங்களாக 10% தண்ணீர் கூட முறையாக வினியோகம் செய்ய வில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுண்டக்காம்பாளையம், செங்காளிபாளையம், சின்னேகவுண்டன் வலசு, விருமண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கடும் அதிருப்தியோடு குடிநீருக்காக தவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News