நாளை மின் பயனீட்டாளர் குறைதீர் சந்திப்பு
குறைகளைத் தீர்க்க மின் பயனீட்டாளர்கள் நாளை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு;
நாளை குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது
ஈரோடு ஈ.வி.என். சாலையில் அமைந்துள்ள தெற்கு கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமை வகிப்பார். ஈரோடு தெற்கு மின் கோட்டத்தை சார்ந்த சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் தெரிவித்து அவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.