சென்னிமலை விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்
விவசாயிகளை ஊக்குவிக்கும் வேளாண்மை துறை, இலவசமாக மரக்கன்றுகளை இலவசமாக பெற வாய்ப்பு;
சென்னிமலை: சென்னிமலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மகாகனி, தேக்கு, சவுக்கு போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் சென்னிமலை வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்கிறது, எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயன்பெறலாம் என்று வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகள் மரக்கன்றுகளை பெற, உதவி வேளாண்மை அலுவலர்களான வேலுமணி (7598002919), கார்த்திகேயன் (9443445291), தேவி (8098104680), மணிகண்டன் (9843914874), தேவகி (7502161391) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம். இயற்கை பாதுகாப்பையும், விவசாய வளத்தையும் மேம்படுத்தும் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.