தண்ணீர் தேடி வனவிலங்குகள் நகர்புறம் நகரும் அவசர நிலை

வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை;

Update: 2025-03-24 06:20 GMT

பண்ணாரி கோவில் அருகே சிறுத்தை, யானை உலா  வனத்துறையினர் எச்சரிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள பண்ணாரி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஒரு சிறுத்தை சாலையோரம் அமைதியாக படுத்திருந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற பேருந்தில் பயணித்தவர்கள், சிறுத்தையை பார்த்து ஆச்சரியமடைந்தனர். அவர்கள் பேருந்தை நிறுத்தி, சிறுத்தையின் வீடியோ பதிவு செய்தனர். சில நிமிடங்கள் கழித்து, சிறுத்தை எழுந்து வனத்திற்குள் மறைந்தது.

அதேபோல், பண்ணாரி செல்லும் வழியில், ஒரு ஒற்றை யானை தண்ணீர் தேடி சாலையோரம் சுற்றித்திரிந்தது. கோடையின் கடும் வெப்பம் காரணமாக, வன விலங்குகள் தண்ணீருக்காக இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வனப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



Tags:    

Similar News