ஈரோடு மாவட்ட மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீன்வள உதவியாளர் பணி

தமிழில் எழுத. படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் தெரிந்திருக்க வேண்டும்.

Update: 2021-11-25 00:12 GMT

ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

பணியின் பெயர்: மீன் வள உதவியாளர்

காலியிடங்கள்: 5

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 3 வருடங் கள் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: தமிழில் எழுத. படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத்துறை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை.

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதை பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் கொண்டு சேர்க்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், சுப்புராம் காம்ப்ளக்ஸ், 2-வது தளம், கலெக்டர் அலுவலகம் அருகில், ஈரோடு: 638 011.

கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பம் பெற adferode1@gmail.com மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.

Tags:    

Similar News