48 கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்கப்பட்டது

தனியாருக்கு கொள்முதல் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2025-03-29 10:30 GMT

48 கொள்முதல் நிலையங்களில் 52,697 டன் நெல் வாங்கப்பட்டது

ஈரோட்டில் நடந்த வேளாண் குறைதீர் நாள் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி பேசுகையில், "அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அகற்றி, தனியார் நிறுவனங்களின் மூலம் கொள்முதல் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், காளிங்கராயன் பாசனப்பகுதியில் அறுவடை தொடங்க இருப்பதால், ஏப்ரல் 1 முதல் தேவையான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், "அறுவடை தொடங்கியவுடன், ஏப்ரல் 1 முதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யும் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை" என்றனர்.

நடப்பு பருவத்தில் கீழ்பவானி பாசனப்பகுதியில் செயல்படும் 48 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 52,697 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News