வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
சென்னிமலை அருகே, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது.;
வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது
சென்னிமலை அருகே, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 82 ஆயிரத்திற்கு தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 7 ஆயிரத்து, 574 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ குறைந்தபட்சமாக, ரூ. 19.06க்கும், அதிகபட்சமாக, ரூ. 25.70க்கும் ஏலம் போனது.
மொத்தம், 3,293 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ. 82 ஆயிரத்து 177க்கு விற்பனையானது.