ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் ஆசனூர் அருகே காட்டு யானை குட்டியுடன் சாலையை வழிமறித்து நின்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-03 10:33 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையோரம் நடமாடி வருகின்றன.


இந்நிலையில் இன்று ஆசனூர் சீவக்காய் பள்ளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் நின்று தீவனம் உட்கொண்டு இருந்தது இதை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது அதன் பின் வாகனங்கள் செல்ல தொடங்கியது. நீண்ட நேரம் சாலையை வழிமறித்து நின்ற யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News