தடுப்புச்சுவரில் மோதிய லாரி - திம்பம் மலை பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் , கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-05-28 13:57 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கியப்பாதையாக,  திம்பம் மலைப்பாதை உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் காய்கறி வண்டிகள், சரக்கு வாகனங்கள் என ஏராளமான வண்டிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று, ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முற்படும்போது, பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே நோயாளியை ஏற்றுவதற்காக அவ்வழியாக ஆம்புலனஸ் ஒன்று வந்நது. அதனை கண்ட வாகன ஓட்டிகள்,  கன்டெய்னர் லாரியின் அருகே இருந்த மிக குறுகலான இடத்தின் வழியே ஆம்புலன்ஸ் செல்ல உதவி செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News