பஸ் பயணியிடம் ரூ. 7.18 லட்சம் பறிமுதல்

Update: 2021-04-01 09:30 GMT

சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் பஸ்சில் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் கர்நாடக அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் உரிய ஆவணம் இன்றி 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது.

விசாரணையில் பணம் எடுத்து வந்த நபர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பதும் இவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியிலுள்ள மார்க்கெட் ஒன்றில் தானியம் வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவர் எடுத்து வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News