ஆம்புலன்ஸில் பிரசவம்

108 ஆம்புலன்ஸிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது

Update: 2021-01-15 05:48 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஹரிபிரியா (22) . நிறைமாத கர்ப்பிணியான ஹரிபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் ஹரிபிரியாவை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்கு சென்றது. அப்போது ஆம்புலன்ஸில் ஹரிபிரியாவை ஏற்றும் போது வீட்டின்முன்பு ஆம்புலன்ஸிலேயே பிரசவ வலி அதிகமானது. உடனடியாக ஆம்புலன்சிலேயே ஓட்டுநர் கார்த்திக் மற்றும் மெடிக்கல் டெக்னிசியன் பாரதி ஆகியோர் வைத்தியம் பார்த்ததில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இருவரையும் சத்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறினர். தாயின் பிறந்த நாளான இன்றே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News