ஈரோட்டில் இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் பறிமுதல் - 811 பேர் மீது வழக்கு

ஈரோட்டில், இ-பதிவு இன்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 811 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-06-12 12:05 GMT

ஈரோடு பவானி அருகே, வாகன ஓட்டிகளிடம் இ-பாஸ் உள்ளதா என்று பரிசோதிக்கும் போலீசார். 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, வரும் ஜூன் 21 -ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து,  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். 19-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 278 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 811 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 766 இருசக்கரவாகனங்களும், 13 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று மட்டும் ரூ.5.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வரும் 21ஆம் தேதி வரை தளர்வு உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பவானி பகுதிகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டது.

பெரும்பாலோனோர் மருத்துவக்காரணங்களுக்காக வெளியே செல்வதாக போலீசாரிடம் கூறினார். மேலும், இ-பதிவு இன்றி ஏராளமான வாகன ஓட்டிகள் வந்திருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து,  இ பதிவு இன்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News